Wednesday 5 April 2017

ஆர்ப்பாட்டம் முழு வெற்றி

04-04-2017செவ்வாய்க்கிழமை நெல்லை கோட்ட நிர்வாகம் மாதாந்திர பேட்டிகளில் உறுத்தியளித்தது போல் நமது GDS கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறந்தள்ளியதை கண்டித்து கூட்டு ஆர்ப்பாட்டம் மாலை 6 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு P3  தோழர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் AIGDSU கோட்ட தலைவர் GDS ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நமது அடிப்படை கோரிகைகளான

1.Seniority list வெளியிட கோரியும்

2. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்ககோரியும்

3. RPLI இன்சென்டிவை உடனே வழங்ககோரியும்

வீரஉரை ஆற்றினர்.

கூட்டு ஆர்ப்பாட்டத்தில் NFPE செயலாளர் "நெல்லை கட்டபொம்மன்"  GDS ஊழியர்களின் பாதுகாவலர் தோழர் ஜேக்கப் ராஜ் சிறப்புரை ஆற்றினார். நெல்லை கோட்ட நிர்வாகத்தின் மாற்றான் தாய் சிந்தனையை கண்டித்தார்

பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான தோழர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

தோழர் வண்ணமுத்து நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைந்தது.


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......