Wednesday 5 April 2017

பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டி 2016 ன் சாதகமான பரிந்துரையோயோடு 18-3-2017 அன்று ஆய்வு கமிட்டியிடம் நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா அவர்கள் கொடுத்த மாற்றங்களோடு உடனடியாக அமுல்படுத்தகோரி மூன்று கட்ட போராட்டங்களுக்கு நமது பொது செயலாளர் திரு மஹாதேவையா அழைப்பு விடுத்திருந்தார்.

முதல் கட்ட போராட்டமாக கடந்த 10-03-2017 அன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

அதன் பின்னர் இரண்டாம்  கட்ட போராட்டமாக 28-3-2017 கோட்ட அளவில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக நாளை 06-04-2017 பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

பேரணியில் முடிவில் ஜந்தர் மந்திரில் அமைந்துள்ள மேடையில் நமது பொது செயலாளர் வீர உரை ஆற்றுகிறார். பேரணியில் நாடு முழுவதுமுள்ள 23 வட்டங்களில் பணிபுரியும் GDS தோழர்கள் 10,000 க்கும் அதிகமானோர் கலந்துகொள்கிறார்கள்.
டெல்லிக்கு வருகைதரும் தோழர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரணியில் இறுதியில் அஞ்சல் துறை செவி சாய்க்கவில்லை  எனில் உச்ச கட்ட போராட்டமான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிக்கு

தோழர் ஞான பாலசிங்
கோட்ட தலைவர்

தோழர் கால பெருமாள்
கோட்ட செயலாளர்

AIGDSU நெல்லை கோட்டம்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......