தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி
நாள் 13.02.2018
இடம் பாளையம்கோட்டை HO
நேரம் மாலை 6 மணி
அனைவரும் இரங்கல் மற்றும் தோழர் காலப்பெருமாள் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களுக்கான SDBS திட்டத்தில் இருந்து முன்கூட்டியே தனது பங்கில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் எந்தவிதமான பிடித்தமும் இன்றி முழு தொகையுடன் WITHDRAW பண்ணலாம் என்று 09.02.2017 தேதியிட்ட விளக்க ஆணை கூறுகிறது .முன்னதாக இது 30 சதத்தை பிடித்துத்தான் மீதி கொடுக்கப்படும் என்றிருந்தது .
Tuesday, 13 February 2018
தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி
Monday, 29 January 2018
தோழர் காலபெருமாள் கோட்ட செயலாளர் மறைவு
நெல்லை AIGDSU சங்கத்தின் கோட்ட செயலர் -
தோழர் S .காலப்பெருமாள் GDSMD விஜயநாராயணம் நாவல்பேஸ் அவர்கள் நேற்றிரவு நாங்குநேரி -திசையன்விளை சாலை ஏமென்குளம் அருகில் சாலைவிபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று 29.012018 நண்பகல் நடைபெறும் .
தோழர் காலப்பெருமாள் அவர்கள் AIGDSU சங்கத்தின் நெல்லை கோட்ட செயலர் -மாநில உதவி செயலர் என்று பல்வேறு பொறுப்புகளில் வகித்தவர், தனது சிம்ம குரலால் போராட்டங்களில் கர்ஜனை புரிந்தவர்.
Gds க்கான திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான 7வது ஊதிய குழு கமிட்டி நேரடி பரிந்துரை கேட்பில் CEA எனும் குழந்தைகள் கல்வி உதவித்தொகை கோரிக்கையை முன்வைத்தவர்.... ஏராளமான போராட்டங்களில் முழங்கியவர்... சிறந்த போராளி....
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்திற்கு மண அமைதியையும் இறைவன் வழங்க வேண்டும் என பிராத்தனை செய்கிறோம்
நெல்லை கோட்டம்.
Sunday, 28 January 2018
Friday, 15 December 2017
FLASH NEWS
FLASH NEWS
GDS கமிட்டி அறிக்கை நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு அமைச்சரவை ஒப்புதலுக்கு பின் அமலாக்கப்படும்.
Wednesday, 22 November 2017
இறந்த GDS ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்காக
நமது மாநில சங்கத்தின் விடாமுயற்ச்சியின் பயனாக கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பிட கடந்த 10.11.2017 அன்று அதற்கான குழு கூட்டம் கூட்டப்பட்டு கல்வி தகுதி அடிப்படையில் GDS பணி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுத்த CPMG அவர்களுக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
மனிதாபிமான அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து பணிநியமனத்திற்கு ஒப்புதல் அளித்த நமது தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் உயர்மரியாதைக்குரிய சம்பத் IPS அவர்களை வாழ்த்துவோம்
மண்டலவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள்
சென்னை --12 திருச்சி -22 மதுரை -9 கோவை -4
ஏற்கனவே திருப்ப்பட்ட விண்ணப்பதாரர்கள் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றபின் விண்ணப்பிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது முன்னணி தோழர்கள் இறந்த நம் GDS தோழர்களின் குடும்பங்களுக்கு வழிகாட்டுங்கள் .