Friday 28 October 2016

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தோழர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thursday 27 October 2016

FLASH NEWS!!!

2014-2015, 2015-2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் உச்சவரம்பு GDS ஊழியர்களுக்கு ரூபாய் ஏழாயிரமாக உயர்த்தி வழங்கிடவும், நிலுவைத்தொகை வழங்கிடவும் இலாகா இன்று 27.10.2016 உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த மந்திரி சபை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்

கடந்த ஜூலை 1–ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும்

DAசெய்தி

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க திட்டமிட்டுள்ளது. 

Tuesday 25 October 2016

அடையாள அட்டை வழங்குவது குறித்து

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே

நமது சங்கம் சார்பாக ஜீடிஎஸ் (GDS) ஊழீயர்கள் அனைவருக்கும் கோட்டக் கண்காணிப்பாளரிடமிருந்து (SSP) அடையாள அட்டை (Identity Card) பெற்று தரப்படும். அடையாள அட்டை (ID Card ) பெற விரும்புவோர் நமது கோட்ட சங்க தலைவர் திரு பாலசிங் அவர்களை உங்களுடைய புகைப்படத்துடன் (Passport size photo ) தொடர்பு கொள்ளவும்
அவரது தொலைபேசி எண் பின் வருமாரு
BALASINGH - 9003479901
நமது அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக இச்செய்தியை பகிரவும்

இங்கனம்
நெல்லை கோட்ட கிராமீய ஊழீயர் சங்கம்

நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி

தோழர்கள இன்று நமது நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி நடைபெற உள்ளது தங்களுக்கு ஏதேனும் குறைகளோ தேவைகளோ இருப்பின் நமது கோட்ட சங்க தலைவர் பாலசிங்   9003479901  அவர்களிடம் மதியம்  2.30 மனிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

Monday 24 October 2016

வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

AIGDSU சங்கம் நடத்தவிருந்த இரண்டுநாட்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அஞ்சல் துறைஅமைச்சரின் சாதகமான பரிந்துரை மற்றும் நிதிச்செயலரின் உறுதிமொழி இவைகளை தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒருமாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 


அவசர செய்தி

அவசர செய்தி

25 & 26 -10-2016  அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது
நமது தோழர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

GDS தோழர்களின் போனஸ் பாரபட்சத்தை நீக்க கோரி 25.10.2016 மற்றும் 26.10.2016 இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் .இன்று 24.10.2016 மாலை முதல் அனைத்து  பகுதிகளுக்கும் வேலைநிறுத்த பயணம் நடைபெறும் .
வாழ்த்துக்களுடன்
 S .காலப்பெருமாள் கோட்ட செயலர் AIGDSU நெல்லை 

Sunday 23 October 2016

ஜிடிஎஸ் கமிட்டியின் தமிழக சுற்றுபயணம்


கடந்த 21-10-2016 சென்னையில் ஜிடிஎஸ் கமிட்டியின் தமிழக சுற்றுபயணம் மேற்கொன்டனர் அதில் 60 க்கும் மேற்பட்ட நமது தோழர்களும் கோட்ட சங்க தலைவர்களும் கலந்துகொன்டு நமது கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் எடுத்து கூறினர். 



Saturday 22 October 2016

பாேனஸ் குறித்து தலைவர் மகாதேவ்ய்யா சமர்பித்த மகஜருக்கு பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து வந்த பதில்

பாேனஸ் குறித்து தலைவர் மகாதேவ்ய்யா சமர்பித்த மகஜருக்கு பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து வந்த பதில் 


                  சென்னையில் GDS கமிட்டி  
GDS கமிட்டி நேற்று 20.10.2016 சென்னையில் GDS ஊழியர்களை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் S .காலப்பெருமாள் அவர்களும் ,மாடசாமி BPM வேப்பங்குளம் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை GDS கமிட்டி முன் நேரடி சாட்சியமாக  அளித்தார்கள் .
   அன்றைய GDS பதவிகள்   கௌரவ பதவி அதனால் அன்று பிற சலுகைகள் தேவையில்லாமல் இருந்தது .இன்று GDS பதவி வாழ்க்கைக்கான பதவி -அரசு ஊழியர்களை போல் எல்லா நன்மைகளும் /சலுகைகளும் கொடுக்கவேண்டும் என்றும்இந்தியாவிலேயே ஒரு அரசு துறையில்  வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்தை குறைக்கும் ஒரு இழி நிலை GDS ஊழியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நமது தோழர் காலப்பெருமாள் மிகச்சரியான இடத்திற்கு கொண்டுசென்றார்கள் .



REPLY/INFORMATION FROM PMO OFFICE REGRADING BONUS ISSUE MEMORANDUM.

REPLY/INFORMATION FROM PMO OFFICE  REGRADING BONUS ISSUE MEMORANDUM. 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......